Sunday, August 18, 2024

2ம் நாள் தெப்ப உற்சவம்

வெட்டுவானம் எல்லையம்மன் திருக்கோயில்

மாவடி சேவை அலங்காரத்தில்  அம்பாள் அருள்பாலித்த காட்சி


        வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு எல்லையம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளி துவங்கி தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.


        அதன்படி ஆடி ஐந்தாம் வாரம் வியாழன் கிழமை துவங்கி சனிக்கிழமை வரை தெப்ப உற்சவம் நடைபெறும் அதன்படி இந்த ஆண்டிற்கான இரண்டாம் நாள் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


இரண்டாம் நாள் தெப்ப உற்சவத்திற்காக அம்மனுக்கு மாவடி சேவை அலங்காரம் செய்யப்பட்டு திருக்கோயிலில் இருந்து வலமாக கொண்டு வரப்பட்ட அம்பாளை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பிரதிஷ்டை செய்து திருக்குளத்தில் 5 சுற்றுகள் தெப்ப உற்சவம் நடைபெற்றது.



இதனை அடுத்து தெப்ப உற்சவத்தில் இருந்து அம்பாள் அங்கீகரிக்கப்பட்ட புஷ்ப பள்ளத்தில் ஏற்றப்பட்டு திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டனர். 


மேலும்  விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயலர் அலுவலர் நரசிம்மமூர்த்தி கணக்காளர் சரவண பாபு மணியம் முரளி செய்திருந்தனர்.  பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும்  குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.





No comments:

Post a Comment