Sunday, July 28, 2024

முத்தங்கி சேவை

 ஆடி இரண்டாம் வெள்ளி அடுத்த ஞாயிற்றுகிழமை 

28.07.2024

வெட்டுவானம் எல்லையம்மன்


28.07.2024 ஆடி 2ம் ஞாயிறு அம்மன் சிறப்பு முத்தங்கி சேவை அலங்காரத்தில் காட்சியத்த காட்சி

                உலகமெல்லாம் காக்கும் ரேனுகா பரமேஸ்வரி வேலூர் மாவட்டத்தின் எல்லை நகரமாக அமையப்பெற்ற வெட்டுவானத்தில் எழுந்தருளி உலக மக்களை எல்லையைகாக்கும் அம்மனாகா இருந்து காக்கும் எல்லையம்மன் திருக்கோயிலில் இன்று அதிகாலை சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் துங்கியது. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தவுடன் அம்பாளுக்கு பிரதிஸ்டை செய்யபட்ட கலசத்தை திருக்கோயிலை வலமாக கொண்டுவந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஹேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் எல்லையம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் சிறப்பு அர்சனை துாபதீப ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்நது பக்கதர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபட்டனர்.

          அதேபோல் ஊர்சவர் அம்பாளுக்கு சிறப்பு முத்தங்கி சேவை அலங்காரம்  செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் மற்றும் கணக்காளர் சரவணபாபு மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஆடி இரண்டாம் ஞாயிறு வெட்டுவானம் எல்லையம்மன் திருக்கோயில் வீடியோ தொகுப்பு கீழே காணலாம்



புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு

தமிழரசன்.ம

No comments:

Post a Comment